சென்னை: இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரான் நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்ப தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கென டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24×7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உதவி எண்கள் பின்வருமாறு:
தொலைபேசி: 011 24193300 (Land line), கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp) மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24×7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் – 18003093793, வெளிநாடு: +918069009901 / 08069009901, +91 8069009900 / 08069009900 (Missed Call) மின்னஞ்சல் – nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
The post இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.
