×

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பு இடையே தாக்குதல்: இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு

இஸ்ரேல்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான தாக்குதல் அதிகரிப்பதால் இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்படி லெபனான் இந்திய தூதரகம் சார்பில் இந்திய நாட்டவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவிற்கும் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய போர்கள் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான தாக்குதல் அதிகரித்துள்ளது. லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வீழ்ந்ததைத் தொடர்ந்து 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

லெபனானில் தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது சிறியது ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புதான் காரணம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம் சாட்டின. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஏற்பட்ட மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லையின் இருபுறமும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தூதரகம் இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பாக லெபனான் இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், “பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, லெபனானில் உள்ள அனைத்து இந்திய நாட்டவர்களும், லெபனானுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களும், எச்சரிக்கையுடன் செயல்படவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தங்கள் மின்னஞ்சல் ஐ.டி. மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்புக்கு cons.beirut@mea.gov. அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

 

The post இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பு இடையே தாக்குதல்: இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Israel- ,Hezbollah Organization ,Indians ,Lebanon ,Israel ,Hezbollah ,Indian Embassy ,Hizbullah ,Hamas ,
× RELATED ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்