×

சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட அறிவுறுத்தல்!

சென்னை: சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடி, நகராட்சி நிர்வாக துறையில் ரூ.228 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி இயக்குனரம் சார்பில் ரூ.38 கோடி என ரூ.500 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

The post சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்.15-க்குள் வெளியிட அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!!