×

தொழில்துறையினர் அதிர்ச்சி நூல் விலை கிலோவுக்கு 5 ரூபாய் திடீர் உயர்வு: நூற்பாலைகள் அறிவிப்பு

திருப்பூர்: நூல் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தனர். இதில், 10 முதல் 30 கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாதத்தில் 2வது முறையாக நேற்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில், நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.5 உயர்ந்தது. தற்போது, ஒரு கிலோவுக்கு 10ம் நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187க்கும், 16ம் நம்பர் ரூ.197க்கும், 20ம் நம்பர் ரூ.255க்கும், 24ம் நம்பர் ரூ.267க்கும், 30ம் நம்பர் ரூ.277க்கும், 34ம் நம்பர் ரூ.290க்கும், 40ம் நம்பர் ரூ.310க்கும், 20வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247க்கும், 24ம் நம்பர் ரூ.257க்கும், 30வது நம்பர் ரூ.267க்கும், 34ம் நம்பர் ரூ.280க்கும், 40ம் நம்பர் ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் விலை உயர்வு திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post தொழில்துறையினர் அதிர்ச்சி நூல் விலை கிலோவுக்கு 5 ரூபாய் திடீர் உயர்வு: நூற்பாலைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Noble ,Tiruppur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ