×

இந்தியா- தென்ஆப்ரிக்கா மோதும் 2வது டி.20க்கும் மழை அச்சுறுத்தல்

க்கெபெர்ஹா: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி நேற்று டர்பனில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டி நாளைக் கெபெர்ஹா செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. போட்டி தொடங்கும் முன் மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கும் அபாயம் உள்ளது. க்கெபெர்ஹா மைதானத்தில் இதுவரை 3 டி.20 போட்டிகள் நடந்துள்ளது. இந்த 3 போட்டியிலும் ஆடி உள்ள தென்ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக வென்றுள்ளது.

The post இந்தியா- தென்ஆப்ரிக்கா மோதும் 2வது டி.20க்கும் மழை அச்சுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,T20 ,Keberha ,cricket ,Dinakaran ,
× RELATED பெண்கள் டி20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியது