×

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் ரயில் நிலையம், விமான நிலையம், கடை வீதிகள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் (ஆர்.பி.எஃப்) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ரயில்வே போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் நுழைவு வாயில், நடைமேடைகள், பார்சல் பெறப்படும் இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரயில் நிலையம் வரும் பயணிகள் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ரயில்வே தண்டவாளங்களில் ரோந்து, துப்பறியும் நாய்கள் மூலமாகவும், வெடிகுண்டு சோதனை பிரிவு நிபுணர்கள் மூலமாகவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதனை நடத்திய பிறகு, ரயில் நிலையத்துக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பயணிகள் 45 நிமிடங்களுக்கு முன்பாக ரயில்நிலையம் வர அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore railway station ,Independence Day ,Coimbatore ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...