×

கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை: குழந்தை இல்லாததால் விபரீத முடிவு

ஆவடி: குழந்தை இல்லாத விரக்தியில் கணவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரை இழந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி(32). இவரது மனைவி நர்மதா(28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் முரளி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

குழந்தை இல்லாத விரக்தியில் கடந்த 20ம் தேதி, வீட்டில் மனைவி இல்லாதபோது முரளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கணவர் இறந்த துக்கத்தில், நர்மதாவும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கணவரை இழந்த சோகத்தில் நேற்று முன்தினம் இரவு நர்மதாவும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், நர்மதாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை: குழந்தை இல்லாததால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Murali ,Arikambedu ,Narmada ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வியாபாரி பரிதாப பலி