×

பெண் போலீஸ் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரை சேர்ந்தவர் வினோத்(30), மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டாக ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி, சமீபத்தில் நடந்த காவலர் பயிற்சி தேர்வில் காவலராக தேர்வாகி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் வினோத் திருபுவனையில் உள்ளபெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தீபாவளியான நேற்று முன்தினம் காலை சத்யா குழந்தையை திருபுவனையில் உள்ள கணவர் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்து தனது அறையில் உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண் போலீஸ் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vinod ,Batukannu ,Saptagiri ,Villayanur ,
× RELATED கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை