- ஓய்வூதியம்
- நெல்லா
- நெல்லை
- பொது மேலாளர் அலுவலகம்
- அரசு போக்குவரத்து கழகம்
- வண்ணார்பேட்டை, நெல்லை
- சிவதனுடஸ்
- போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல அமைப்பு
- பழனி
- எட்டப்பன்
- செல்வராஜ்
- தின மலர்
நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த போராட்டத்துக்கு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர் நல அமைப்பின் உதவி தலைவர் சிவதாணுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனி, எட்டப்பன், செல்வராஜ், ராமையாபாண்டியன், ராஜன், கிருபாகரன், சேதுராமலிங்கம், பெருமாள், மதுசேகர், தர்மராஜ் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சங்க செயலாளர் ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ராமசந்திரன் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத்தலைவர் வெங்கடாசலம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, சுப்பையா, வேல்சாமி, மாணிக்கம், சூசை மிக்கேல், பெலிக்ஸ், சிங்கராயன், தங்கமாரி, சிவகாமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
The post பஞ்சப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் நெல்லையில் போராட்டம் appeared first on Dinakaran.