×

எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு

சென்னை: எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார். “எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே வீடற்றோருக்கு மழைக் காலத்துக்குள் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் கூறியிருந்தார். 114 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி அவர்களுக்கு நிலையான முகவரியை அளித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி. சென்னையை போன்று பிற பகுதிகளிலும் வீடற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் உதயநிதியின் முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற காங். சார்பில் வாழ்த்துகள்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kang ,Udayanidhi ,Rampur Kannapar Didal ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Udayaniti ,Ramampur Kannapar Didal ,Ulampur Kannapar Didal ,Dinakaran ,
× RELATED தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114...