×

துரந்த் கோப்பை கால்பந்து: காலிறுதி சுற்று இன்று தொடக்கம்

கவுகாத்தி: துரந்த் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் காலிறுதியில் நார்த்ஈஸ்ட் – இந்திய ராணுவம் மோதுகின்றன. நாட்டின் பழமையான கால்பந்து போட்டியான துரந்த் கோப்பை தொடரின் 132வது தொடர் ஆக.3ம் தேதி தொடங்கியது. மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடந்து வரும் இந்தப் போட்டியின் லீக் சுற்றில் 2 வெளிநாட்டு அணிகள் உள்பட 24 அணிகள் களமிறங்கிறன. தலா 4 அணிகளை கொண்ட 6 பிரிவுகளில் நடந்த லீக் சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

இன்று நடக்கும் முதல் காலிறுதியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி – இந்திய ராணுவம் எப்டி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கொல்கத்தாவில் நாளை நடைபெறும் 2வது காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் எப்சி – கேரளா எப்சி அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து ஆக.26, 27 தேதிகளில் நடைபெறும் 3வது, 4வது காலிறுதியில் முறையே எப்சி கோவா – சென்னையின் எப்சி, மோகன் பகான் எஸ்ஜி – மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் ஆக.29, 31 தேதிகளிலும், செப்.3ம் தேதி பைனலும் நடைபெற உள்ளன.

The post துரந்த் கோப்பை கால்பந்து: காலிறுதி சுற்று இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Durant Cup Football ,Guwahati ,Durant Cup ,Northeast ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம்...