×

நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை வெட்டிய ரவுடி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரது தந்தை முத்து. இருவரையும் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (27) மற்றும் அவரது அண்ணன் தம்பி ஆகியோர் சேர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு வெட்டியுள்ளனர். இது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் மணிகண்டன் கடந்த மாதம் 10ம் தேதி நீதிமன்றத்தில் ராம்குமார் மற்றும் அவரது அண்ணன், தம்பிக்கு எதிராக சாட்சியளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மணிகண்டனை மிரட்டி, கத்தியால் வெட்டி உள்ளார்.

லேசான காயத்துடன் தப்பி ஓடிய மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டதில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ராம்குமாருக்கு எதிராக சாட்சி சொல்ல மாட்டேன் என மணிகண்டன் பணம் வாங்கியதாகவும், பணத்தை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொல்லியதால் மணிகண்டனை வெட்டியதாகவும் ராம்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை வெட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Perambur ,Manikandan ,8th Street, MGR Nagar, Kodunkaiyur ,Muthu ,Dinakaran ,
× RELATED போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய ரவுடி