திருமலை: தெலங்கானா மாநிலத்தில் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் ஆளும் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக, எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரசில் எம்எல்ஏ சீட்டுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனு பெறும் பணி நேற்று தொடங்கியது. விருப்ப மனுவுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் பெறுவதுடன் இம்மாதம் 25ம் தேதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் .
The post தெலங்கானா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது appeared first on Dinakaran.