×

சென்னையில் கடந்த 7 நாட்களில் வாகன திருட்டு, செல்போன் பறிப்பு தொடர்பான வழக்குகளில் 28 பேர் கைது


சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் வாகன திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 20 வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 5 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 7.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் பணம் ரூ.16,500 பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO – Drive against Crime Ofendors) சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 05.11.2023 முதல் 11.11.2023 வரையிலான 7 நாட்களில் பதிவான செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு தொடர்பான 14 வழக்குகளில் தொடர்புடைய, 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், இவ்வழக்குகளில் தொடர்புடைய 5 இளஞ்சிறார்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 7.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் பணம் ரூ.11,000 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடந்த 7 நாட்களில் வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பான 6 வழக்குகளில் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, பணம் ரூ.5,500 மற்றும் 15 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னையில் கடந்த 7 நாட்களில் வாகன திருட்டு, செல்போன் பறிப்பு தொடர்பான வழக்குகளில் 28 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...