×

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகையின் போது திடீரென நுழைந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்து புறப்பட தயார்நிலையில் இருந்த விமானத்துக்குள் ஊடுருவி, நடுவானில் அந்த விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிரடி படை, விமான பாதுகாப்பு படை, விமான கடத்தலை முறியடிக்கும் சிறப்பு அதிரடி படையினர் ஒருங்கிணைந்து இயந்திரத் துப்பாக்கிகளுடன், விமான ஓடுபாதை பகுதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது கருப்பு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, தீவிரவாதிகள் போல் மறைந்திருந்த 4 இளைஞர்களை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இதையடுத்து, பாதுகாப்பு ஒத்திகை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

The post சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Special security drill to counter ,Chennai airport ,Meenambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர்...