×

வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு குறைந்த மீன்களுடன் நேற்று காலை கரை திரும்பினர்.

The post வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,
× RELATED இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க கோரிக்கை