×

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் சார்பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம், வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றியவர் பெத்துலெட்சுமி(48). இவர், கடந்த 19.10.2023ம் தேதி இடைத்தரகர்களிடம் இருந்து பணம் பெற்றபோது, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500ஐ கைப்பற்றினர். தொடர்ந்து பரமக்குடி புது நகரில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.12 லட்சம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து அவரது சொத்து விவரங்களை சேகரித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பெத்துலெட்சுமி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டறிந்தனர். இதனால் நேற்று சார்பதிவாளர் பெத்துலெட்சுமி மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தற்போது பெத்துலட்சுமி சிவகங்கை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

The post லஞ்ச புகாரில் சிக்கிய பெண் சார்பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Pethuletsumi ,Vavalpattinam, Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அருகே ரூ.100 ஜெராக்ஸ் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது!!