×

அதிராம்பட்டினம் பகுதியில் சீசன் துவக்கம்: மருத்துவ குணம் வாய்ந்த நத்தை விற்பனை மும்முரம்

தஞ்சாவூர், ஏப்.18: அதிராம்பட்டினம் பகுதியில் சீசன் தொடங்கியதால் மருத்துவ குணம் வாய்ந்த நத்தை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ ரூ.250க்கு விற்றாலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்பகுதியில் நத்தை சீசன் தொடங்கியுள்ளது. நத்தை பெரும்பாலும் சேறும் மணல் சார்ந்த ஏரி குளங்களில் நீர் வடியும் நேரங்களில் நீரை சேமித்து கொண்டு பூமிக்கு அடியில் உயிருடன் வாழும். மீண்டும் மழைக் காலங்களில் ஈரப்பதமுள்ள தரையில் மேலாக காணப்படும். தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் வெயில் அடித்து வரும் நிலையில் ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி இருப்பதால் மகிழங்கோட்டை, மழவேளிற் காடு, கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நத்தை அதிக அளவில் காணப்படுகிறது. உடலில் உள்ள உஷ்ணத்தை எளிதில் குறைக்க கூடியது நத்தை. மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

வெளிநாடுகளில் ஓட்டல்களில் இதனை தொட்டிகளில் வளர்க்கப்பட்டு, விரும்பி கேட்பவர்களுக்கு உடனே சுடச்சுட இதை சமைத்து கொடுக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் முதல் நாள் பிடித்துவந்த நந்தைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து விடுகின்றனர். பின்னர் மறுநாள் நத்தைகள் சேறுகளை கக்கிய பிறகு, அந்த நீரை மாற்றி வேக வைத்து அதனை உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.அதிராம்பட்டினம் பகுதியில் தற்போது, நத்தை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது நத்தை இறைச்சியில் அதிக நன்மைகளை தருகிறது. இறைச்சியில் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு சத்து உள்ளது.

நத்தைகளில் கனிமச் சத்து, இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. பெண்களுக்கு உள்ள நீண்ட நாள் இடுப்பு வலியையும், மூலநோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த மருத்துவ குணம் வாய்ந்த நத்தை கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்தை கூட்டை உடைத்து இறைச்சி மட்டும் வேண்டுமென்றால் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டதால் மக்கள் நத்தையை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நத்தை பிடிக்கும் பணியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post அதிராம்பட்டினம் பகுதியில் சீசன் துவக்கம்: மருத்துவ குணம் வாய்ந்த நத்தை விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Athirampatnam ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...