![]()
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். ஏற்கனவே ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு அண்ணாமலை ஆஜரானார். என் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
