×

சுரண்டையில் அம்மா மிக்ஸியுடன் நின்ற வாகனத்தால் பரபரப்பு

சுரண்டை: சுரண்டையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் அருகில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மிக்சியுடன் தனியார் வாகனம் நிற்பதாக தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இந்த புகார் மனு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து தனியார் வாகனத்தை சுரண்டை போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வீ.கே.புதூர் தாசில்தார் சுடலைமணி உத்தரவின் பேரில் சுரண்டை சிவகுருநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் முதல் கட்ட விசாரணையை நடத்தினார். விசாரணையில் கன்னியாகுமரி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் ஏலம் விடப்பட்டு தென்காசிக்கு 361 மிக்ஸி கொண்டு செல்லப்படுவதாக டிரைவர் சந்தோஷ் கூறினார். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுரண்டையில் அம்மா மிக்ஸியுடன் நின்ற வாகனத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Surandai ,Veluchamy ,Tenkasi District Collector ,AIADMK ,Pottal Madasamy Temple ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்