×

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி


தென்காசி: குற்றாலத்தில் கடந்த 2 தினங்களுக்குப் பிறகு நேற்று மதியம் முதல் சாரல் பெய்தது. இரவு வரை தொடர்ந்து பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் சில பிரிவுகள் ஒன்றாக இணைந்து தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இரவு முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய பிரதான அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குஷியாக குளித்து மகிழ்கின்றனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

The post குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kurdalam ,Tenkasi ,Courtalam ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை