×

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல், ஆர்ப்பாட்டம் விருதுநகர், சிவகாசியில் நடந்தது

விருதுநகர், டிச. 3: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர், சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஐ மாநில நிர்வாக குழு ராமசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தலைமை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி லிங்கம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தொடர் முழக்கம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு விஜயமுருகன், மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, விவசாய தொழிலாளர் சங்க பாலமுருகன், சிபிஎம் பாலசுப்பிரமணியன், முருகன் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

*சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை போலீசார் தடுத்ததால், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு தேவா மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 33 பேரை கைது செய்தனர்.

Tags : Marxist ,demonstration ,peasants ,struggle ,Delhi ,Virudhunagar ,Sivakasi ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...