×

பொள்ளாச்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை

பொள்ளாச்சி, டிச.2:  பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியில் பெரியார் காலனி, மணியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சப் கலெக்டர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதில் உயிர் நீத்த  மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறியபோது, பொள்ளாச்சி பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : martyrs ,Pollachi ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...