×

கே.ஆர்.பி அணையில் நீர்திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, நவ.30: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 760 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 760 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

Tags : places ,
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி