×

யூனியன்களில் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம் நாட்கள் வாரியாக நடக்கும் ஊர் பெயர் அறிவிப்பு

விருதுநகர், நவ. 27: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம், ஆலோசனைகள் நடைபெறவுள்ளது.இதையொட்டி நவ.30ம் தேதி வத்ராப் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.3ல் வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.8ல் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.11ல் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.15ல் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் டிச.18ல் விருதுநகர் மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், டிச.22ல் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.26ல் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.31ல் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம்- ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே படித்துவிட்டு வேலையின்றி உள்ள மற்றும் சுயமாக தொழில் செய்து சாதிக்க துடிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடக்க உள்ள தொழில் ஊக்குவிப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

கூட்டத்தில் அரசு கடன் திட்டங்கள், மானியங்கள் குறித்தும் வங்கியில் கடன் பெறுவது எப்படி, தொழில் முனைவோராவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.மேற்குறிப்பிட்ட நகரங்கள், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த- படிக்காத இளைஞர்கள் அந்நாளில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அரசு கடன் திட்டங்களை பற்றி அறிந்து பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.

Tags : Unions ,
× RELATED பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!