பெரம்பலூர், நவ.23: குத்தாலத்தில் உதயநிதி கைதை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 33பேரை போலீசார் கைது செய்தனர். திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவெண்காடு இல் லத்திலிருந்து 3வது நாள் பயணமாக புறப்பட்டபோது, குத்தாலத்தில் கைது செய் யப்பட்டதையொட்டி பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணியினர் புது பஸ்டா ண்டு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அங்கு சென்ற பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், செந்தமிழ்ச்செல்வி உள்ளி ட்ட போலீசார், திமுக மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஹரிபாஸ்கர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டஇளைஞர ணி துணை அமைப்பாளர் தங்க.கமல், பெரம்பலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, ஒன் றிய துணைஅமைப்பாளர் கள் அறிவழகன், அந்தாலி, வேப்பூர் ஒன்றியஇளைஞ ரணி அமைப்பாளர் பிரபா கரன்,நகர துணைஅமைப் பாளர்கள் சின்னத்தம்பி, அறிவழகன் உள்ளிட்ட 33 பேர்களைக் கைது செய்தனர்.