×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று

கடலூர், அக். 30: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,110 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 266 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரையில் 22 ஆயிரத்து 421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 358 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 5 ஆயிரத்து 742 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேர், ஒரு செவிலியர் மற்றும் ஏற்கனவே நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 679 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது.  நேற்று நோய் தொற்று காரணமாக யாரும் இறக்கவில்லை.

Tags : district ,Cuddalore ,
× RELATED கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!!