வத்திராயிருப்பு, அக். 28: வத்திராயிருப்ப அருகே பிளவக்கல்லில் பெரியாறு- கோவிலாறு அணைகள் உள்ளன. இதன் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்வரத்து மிக, மிக குறைந்தளவே அணைக்கு வருகிறது. பெரியாறு அணையி–்ன் மொத்த உயரம் 47.56 அடியில் தற்போது நீர்மட்டம் 33.33 அடி உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 0.08 கனஅடி வீதம் வந்தது. மழையின் அளவு 29 மிமீ பதிவானது. கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடியில் தற்போது நீர்மட்டம் 8.10 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 0.08 கனஅடி வீதம் உள்ளது. மழையளவு 32.4 மிமீ பதிவானது. அதேநேரம் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1 மணிநேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.