×

நாளை மறு தினம் நடக்கிறது தூத்துக்குடி மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி,அக்.28: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை மறுநாள் (30ம் தேதி) மாலை 6மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெறுகிறது. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி முன்னிலை வகிக்கிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், வரும் 5ம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் கலந்துகொள்வது குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் எனது தலைமையில் விவாதிக்கப்படுகிறது.எனவே, கூட்டத்தில் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : activists meeting ,Thoothukudi Municipal DMK ,Geethajeevan MLA ,
× RELATED இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்