×

நன்னடத்தை பிணையை மீறியவருக்கு ஓராண்டு சிறை

சென்னை: நன்னடத்தை பிணையை மீறிய கொலை குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து செயல்முறை நடுவர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தர்மராஜன் உத்தரவிட்டார்.  வடபழனி ஈஸ்வர்நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (32). இவர் மீது திருவல்லிக்கேணி, சூளைமேடு, நுங்கம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் 32 குற்ற வழக்குகள் உள்ளன. இதையடுத்து, ஐயப்பன் ஓராண்டு நன்னடத்தையுடன் இருப்பதாக பிணை ஆவணம் அளித்து ஜாமீனில் வந்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி நன்னடத்தை பிணையை மீறி அந்தோணி உபால்டு என்பவரை தன்னுடைய கூட்டாளியுடன் சேர்ந்து குத்திக்கொலை செய்தார்.
இதையடுத்து, ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து, நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக ஐயப்பனுக்கு, செயல்முறை நடுவர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தர்மராஜன் ஓராண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...