×

வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சி மாபெரும் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம், செப்.29: மத்திய அரசு சமீபத்தில் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த போராட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் இந்திய முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, காங். மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் கோபி மற்றும் அனைத்து தோழமை கட்சிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாயிகள் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து வேளாண் மசோதாவை நிறுத்தக் கோரி கோஷமிட்டனர்.

மண்டபம் ஒன்றிய திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகபூபதி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தௌபீக் அலி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடி காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை தாங்கினார். மாநில தீர்மான குழு துணைத் தலைவர் திவாகரன், மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் குணா, இந்திய கம்யூ. முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன், மார்க்சிய கம்யூ. மாவட்ட செயலாளர் காசிநாததுரை, காங். நகர் தலைவர் அப்துல் அசீஸ், நகர் செயலாளர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நயினார்கோவில் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமை வகித்தார். தொமுச அரசு மணி, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், காங். வட்டார தலைவர் ஆதி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பார்த்திபனூரில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்(கிழக்கு) சந்திரசேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் என்.எஸ்.கிருஷ்ணன் வீதியில் திமுக நகர் செயலாளர் நாசர்கான், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக் ஆகியோர் தலைமை வகித்தனர். தொண்டியில் திருவாடானை சேர்மன் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. நகர் பொறுப்பாளர் இஸ்மத் நானா முன்னிலை வகித்தார். கூட்டணி கட்சியினர் பாலசுப்பிரமணியன், சிவாஜி, சந்தானம், ராதாகிருஜ்ணன், ஜிப்ரி, காதர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையிலும், திமுக ஒன்றிய செயலாளர்கள் காந்தி, மதிவாணன், யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், தொகுதி செயலாளர் கண்ணன் மற்றும் நகர் செயலாளர் புரோஷ் கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக விவசாய அணி வைரவன், நகர் அவைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமுதி கோட்டைமேடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தமிழ்செல்விபோஸ், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு மாவட்ட கவுன்சிலர் சசிகுமார், நகரச் செயலாளர் பாலமுருகன், நெசவாளர் அணி மனோகரன், தொண்டர் அணி பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன், மீனவர் அணி காசி மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அபிராமம் பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர் குருநாதன் முத்து ஜாகிர் உசேன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், சி.பி.ஐ விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, காங். வட்டார தலைவர் தனசேகரன் பங்கேற்றனர். சாயல்குடி மும்முனை சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் தலைமையிலும், முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே காங். எம்.எல்.ஏ மலேசிய பாண்டியன் தலைமையில் நடந்தது. கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், மண்டபம் பேரூர் திமுக சார்பில் தபால் அலுவலகம் முன் தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : alliance ,DMK ,protest ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி