×

பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற அழைப்பு

ஊட்டி, ஆக. 22: தமிழ்நாடு  பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் திட்டங்களில் பயன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும்.  ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது  பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு  குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொதுகால கடன்  திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன்  உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிதத்தில் இருந்து 8  சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்களுக்காக புதிய பொற்காலத்  திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.  

ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய  உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரையும்,  குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு  வட்டி விகிதம் 4 சதவிதம் ஆகும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள்  பூர்த்தியாகிருக்க வேண்டும்.   மேலும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மூலம் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய  உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1  லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும்  வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். கறவை மாடு 2  வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து  கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி  செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்  என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

Tags : Economic Development Corporation ,
× RELATED தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்...