×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை, பிப்.28: மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலீப்நகரில் இஸ்லாமியர்கள் மற்றும் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் பந்தல் அமைத்து நேற்றுமுன்தினம் முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று 2வது நாளாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய மசோதாக்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Tags : Citizenship Law ,
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து...