×

வெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

புதுக்கோட்டை, பிப்.27: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வெள்ளனூரில் அழகுநாச்சியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு திருவிழா கடந்த18ம்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மனை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் வெள்ளனூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதலே வெள்ளனூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் அழகுகுத்தி எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளனூர் போலீசார் செய்திருந்தனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ