×

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

திருத்துறைப்பூண்டி, பிப்.26: விவசாயிகளிடம் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40 அதிகாரிகள் கேட்பதாக திமுக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  திருவாரூர் மாவட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. அதற்கான அறுவடை பணிகள் முடிந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் விவசாயிகள் கொண்டு வரும் பல ஆயிரம் நெல் முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவைகள் வீணாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் இயந்திரங்களை இரட்டிப்பு செய்து வேகமாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை எடுக்கும் முறையை மாற்றி கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டையை கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு ரூ.40 பணம் அதிகாரிகள் கேட்பதாக புகார் வருகிறது. அதனை கண்டறிந்து மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : MLA ,DMK ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...