×

குடும்பத்தைக் காப்பாற்ற பார்வையற்ற பட்டதாரி பெண் வேலைகேட்டு மனு

விருதுநகர்,பிப்.25:  அரசு வேலை வழங்க வேண்டும் என விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பார்வையற்ற பெண் மனு அளித்தார்.விருதுநகர் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாளில், ஓ.கோவில்பட்டியை சேர்ந்த பார்வையற்ற பெண் சுகிபிரின்ஸ் தனது தாய் மார்கிரேட் மேரியுடன் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில், பட்டாசு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த தந்தை கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார்.
தற்போது தாய் மார்கிரேட் மேரி மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறேன். உடன் பிறந்து மூத்த சகோதரர் மனவளர்ச்சி குன்றியவர். நான் பார்வையில்லாத நிலையில் கல்லூரியில் பிஏ படித்து வருகிறேன். தந்தை இல்லாததால் குடும்பம் நடத்த வழியில்லை.  தாய், உடன்பிறந்தோர், மற்றும் பாட்டி ஆகியோரை காப்பாற்ற தகுதியுள்ள அரசு வேலை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு