திருச்செங்கோடு, பிப்.21: குடியுரிமை திருத்த சட்டம் கண்டித்து, திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில், கேரள மாநி அரசை போல், தமிழக அரசும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட நிர்வாகக் குழு கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன், செங்கோட்டையன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தங்கராசு, நகர துணை செயலாளர்கள் முருகேசன், சுகுமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட சிறுபான்மை துணை தலைவர் சாகித்ராஷா, நகர தலைவர் சிக்கந்தர், துணைத்தலைவர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கோஷம் எழுப்பினர்.