×

காளான் வளர்ப்பு குறித்த இலவச திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அருப்புக்கோட்டை, பிப். 20: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்ற வேளாண்மை அறிவியல் நிலையம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்திய திறன் மேம்பாட்டுக்கழகம் மத்திய அரசு மூலம் காளான் வளர்ப்பு குறித்த 25 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவைகளை நாளை 21ம் தேதிக்குள் வேளாண் அறிவியல் நிலையத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த பயிற்சி ஆர்வமுடன் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள 9171717832- 04566 220521 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை