×

படிப்புக்கேற்ற பாதுகாப்பான வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், பிப்.19: படிப்புக்கேற்ற பாதுகாப்பான வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாரத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். ரயில்வே உள்ளிட்ட அரசுத்துறைகளில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் முடிவை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அமலாக்க வேண்டும். இளைஞர்களின் திறமைகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் இளைஞர் நலக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு தேர்வாணைய ஊழலை தடுத்து தகுதியான இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரேஒரு பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை நவீனப்படுத்தி நேரடியாக 3 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேர் வேலை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் தீபா, மாவட்ட செயலாளர் சிவராமன், மாவட்ட பொருளாளர் ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Democracy advocates ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு