×

குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து பெண் சாவு

சிங்கம்புணரி, பிப். 19: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கே.அம்மாபட்டி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னகாளை மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவியிடையே குடும்பத்தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஊரில் தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் லட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தை குடித்து லட்சுமி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து புழுதிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து லட்சுமியின் தந்தை பொன்னையா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...