×

கோயில் குளத்தில் வாலிபர் சடலம் மீட்பு

தாரமங்கலம், பிப்.19: தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு வியாபாரிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு, தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவ்ர கொல்லப்பட்டி யூனியன் அலுவலகம் அருகே வசித்து வரும் சேட்டு என்கிற கோபி (35). என்பது தெரியவந்தது. கோபி அங்குள்ள ஒரு மீன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : temple pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...