×

மர்ம நபர்கள் கைவரிசை தா.பழூர் கடைவீதியில் சரக்கு லாரி மோதி மின்கம்பம் சேதம்

தா.பழூர், பிப்.19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் உள்ள மின்கம்பத்தில் சரக்கு லாரி மோதியதால் மின்கம்பம் முறிந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இடிபாடுக்கு உள்ளான மின்கம்பம் சாலையின் ஓரமாக இருப்பதாலும், வளைவில் இருப்பதாலும் சரக்குவாகனம் அகற்ற நேரம் ஆனதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் முட்டுகட்டைகள் கொடுக்கப்பட்டு வாகனம் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.இருப்பினும் உடைந்த மின் கம்பத்தால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் சாலையை கடந்து சென்றனர். மின்கம்பம் உடைந்ததால் சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும் முறையான பாதுகாப்பு இல்லாததால் அவ்வப்பொழுது மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் உதவி செயற்பொறியாளர் இளையராஜா கூறுகையில், தற்பொழுது இரவு நேர மின் வினியோகம் தடைபடா வண்ணம் முட்டுக்கட்டைகள் கொடுத்து தற்பொழுது வினியோகம் செய்யப்படும். காலையில் உடனே இதற்கான மாற்று ஏற்பாடு நடைபெறும்என்றார்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...