×

எாிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, பிப். 19:மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம் தேதி கோத்தகிரியில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் சிறப்பாக செயல்படும் பொருட்டு, எரிவாயு நுகர்வோர் குறைகளை களையவும் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம் ேததி மாலை 3 மணிக்கு கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்க உள்ளார். இக்கூட்டத்தில் எண்ைணய் நிறுவன பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ