×

தொழிலாளியை வெட்டியவர் கைது

நெல்லை, பிப். 18: வி.கே.புரம், தெற்கு அகஸ்தியர்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன் (40). கூலி தொழிலாளியான இவர், நேற்று டாணா அனவன்குடியிருப்பு பகுதிக்கு பைக்கில் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காளிபார்விளையை சேர்ந்த காசிபாண்டி மகன் செல்வராஜ் (34) என்பவர் முருகனை வழிமறித்து தகராறு செய்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த செல்வராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் முருகனை தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் விசாரணை நடத்தி செல்வராஜை கைது செய்தார்.

Tags :
× RELATED 2 கோயில்களில் நகை பணம் கொள்ளை