திருச்சி, ஜன.29: திருச்சி பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக அலுவலகத்தின் சார்பில் 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வங்கியின் துணை பொது மேலாளர் முரளிகிருஷ்ணா வழிகாட்டுதலின்படி திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளின் சார்பில் பள்ளிகளில் 7,100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்டல மேலாளர்கள் சபிராபர்வீன், வரதராஜன், செந்தில்குமார், முருகன், அமலானந்த் ஆகியோர் இதனை செயல்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள், மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டன. உதவி பொது மேலாளர் சுப்ரமணியன் சாலை பாதுகாப்பு வாரம் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.