×

கோவை ஆடிட்டர் ஊட்டியில் தற்கொலை

ஊட்டி, ஜன. 29: ஊட்டி அருகேயுள்ள 6வது மைல் பகுதியில் காமராஜ் சாகர் அணையில் மீட்கப்பட்ட உடல், மேட்டுப்பாளையத்தை சேரந்–்த ஆடிட்டர் எனத் தெரியவந்தது. ஊட்டி அருகேயுள்ள 6வது மைல் பகுதியில் காமராஜ்சாகர் அணையின் பின் பகுதியில் உள்ள தேங்கிய தண்ணீரில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஊட்டி ஜி1 போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்துள்ளது. அதனை தொடர்பு கொண்ட போலீசார், அவர்களை ஊட்டிக்கு வரவழைத்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் மேட்டுப்பாளையம் அமீத் அபாட்மெண்ட்டில் வசித்து வந்த ஆடிட்டர் செந்தில்குமார் (45) எனத் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Coimbatore ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...