×

மதுவிலக்கை வலியுறுத்தி வக்கீல் நந்தினி பிரசாரம்

இளையான்குடி, ஜன. 28: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வக்கீல் நந்தினி இளையான்குடியில் நேற்று பிரசாரம் செய்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மதுரை வக்கீல் நந்தினி சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நேற்று பிரசாரம் செய்தார். இதில் அவரது கணவர் குணா, தந்தை ஆனந்தன் கலந்துகொண்டனர். பின்னர் நந்தினி கூறுகையில், ‘‘மதுவினால் இளைஞர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே இருண்டுபோயுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து அரசியல் செய்தால், நாட்டுக்கு எப்படி நல்லது செய்வார்கள். மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் குறித்து அரசிடம் கேள்வி கேட்க வேண்டும்’’ என்றார். இளையான்குடி பஸ் ஸ்டாண்ட், பஜார் பகுதி, கண்மாய்கரை பகுதி ஆகிய மக்கள் கூடும் இடங்களில் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த நந்தினிக்கு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் வரவேற்பு அளித்தனர்.

Tags : Nandini ,
× RELATED கொளுத்தும் வெயிலில் 4 மணி நேரம்...