×

திருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

திருவள்ளூர், ஜன. 24: திருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சாலையில், தேரடி அருகே சாலையோரம் நிறுத்தப்படும் தொழிற்சாலை வேன்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள்  விபத்தில் சிக்கும் அவலநிலை நீடிக்கிறது. திருவள்ளூர் தேரடியில் இருந்து காக்களூர் செல்லும் பைபாஸ் சாலை குறுகிய நிலையில் உள்ளது. இந்நிலையில், இச்சாலையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு  தொழிற்சாலையில் பணிபுரியும் ஆட்களை அழைத்து வரவும், கொண்டு செல்லவும் தனியார் வேன்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த சாலை வழியாக மூன்று பள்ளிகள் உள்ளன. இங்கு ஏராளமான கடைகளும், மருத்துவமனைகளும் உள்ளது. இச்சாலை வழியாக பஜார் செல்லும் வாகனங்களும்  சென்றுவருகிறது. இதனால், இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். மக்கள் நடமாட்டமுள்ள இங்கு, சாலையோரம் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து  வருகின்றனர். மேலும், முந்திச்செல்லும் போது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்வதால் சிறு, சிறு விபத்துகளும் அன்றாடம் நடந்து வருகிறது.  இதை தேரடியில் உள்ள போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே,  பைபாஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Accident ,Thiruvallur - Kakkallur Bypass Road ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...