×

ரயிலில் கடத்திய 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பாலக்காடு, ஜன.23:கேரள மாநிலம் பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் அவ்வப்போது ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகம், முதன்மை பகுதி போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் ஒருவர் ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 3.160 கிலோ தங்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 1 கோடியே 20 லட்சம் ஆகும்.இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது அந்த தங்க நகைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்தி கொண்டு வரப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து நகை கடத்தி வந்த திருச்சூர் காட்டூரை சேர்ந்த ஷாஜூ (49), புதுக்காட்டை சேர்ந்த ஷர்லேஷ்(48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : jewelery ,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...