×

சாகுபடியில் முத்திரை பதித்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா

மன்னார்குடி, ஜன. 21: தேசிய உழவர் தினத்தையொட்டி சாகுபடியில் முத்திரை பதித்த விவசாயி களுக்கு விருது வழங்கும் விழா மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் தேசிய உழவர் தின விருது வழங்கும் விழா மன்னார்குடியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் காவிரி ரங்கநாதன் தலைமை வகித்தார். விழாவில், விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு விவசாய சங்கங் களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநில தலைவர் காவிரி தனபாலன், அமைப்பாளர் வரதராஜன், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் அரிச்சந்திரபுரம் ஜெயக்குமார் ஆகியோர் சாதனை சாகுபடி விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.விழாவில், மன்னை வர்த்தக சங்க அமைப்பு செயலாளரும், இயற்கை விவ சாயிமான எஸ்எம்டி கருணாநிதி பேசினார். முன்னதாக மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் கரிகாலன் பயறு உழவர் உற்பத்தியாளர் கம்பெனி நிறுவன தலைவர் ராஜா வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொள்கை பரப்பு செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.

Tags : Award Ceremony ,
× RELATED பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான்...